Latest News

November 26, 2013

மேய்ச்சல் தரை­களில் அத்­து­மீறி செய்­யப்­பட்­டுள்ள விவ­சா­யத்தை பாது­காக்கும் வகை­யி­லேயே திரு­மலை கூட்­டத்தில் முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது அரி­ய­நேத்­திரன் எம்.பி.குற்­றச்­சாட்டு
by admin - 0

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ள மேய்ச்சல் தரை­களில் அத்­து­மீறி செய்கை பண்­ணப்­பட்­டுள்ள பயிர்­களை பாது­காக்கும் நோக்­கிலும் கால் நடை­களை பட்­டினி போட்டு பண்­ணை­யா­ளர்­களின் வாழ்­வா­தா­ரத்தை நசுக்கும் வகை­யி­லுமே திரு­கோ­ண­ம­லையில் நடத்­தப்­பட்ட உயர்­மட்டக் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட முடிவு சுட்­டிக்­காட்­டு­கின்­றது.
இவ்­வாறு மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேத்­திரன் கருத்துத் தெரி­வித்தார். கிழக்கு மாகா­ணத்தில் ஏற்­பட்­டுள்ள காணிப் பிரச்­சி­னை­களை ஆராய்ந்து தீர்வு காண்­ப­தற்­காக திரு­கோ­ண­ம­லையில் ஓர் உயர்­மட்டக் கூட்டம் நடத்­தப்­பட்­டது. அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் அமைச்­சர்கள், அர­சாங்க அதி­பர்கள் என பல தரப்­பி­னரும் கலந்­து­கொண்­டனர்.
இக்­கூட்­டத்தின் தீர்­மானம் குறித்து ஊட­கங்­களில் வெளி­யான தகவல் குறித்து கருத்துத் தெரி­விக்­கையில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,
பெரும்­போக அறு­வடை வரை கால்­ந­டை­களை அதற்­கென ஒதுக்­கப்­பட்ட மேய்ச்சல் தரை­க­ளுக்கு கொண்டு செல்­லுதல் வேண்டும். ஆனால், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மேய்ச்சல் தரை­களில் அத்­து­மீறி விவ­சாயம் செய்­யப்­பட்­டுள்­ளது. இது பற்றி நாம் கடந்த அக்­டோபர் மாதம் 7 ஆம் திகதி மட்­டக்­க­ளப்பில் நடை­பெற்ற மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்­டத்தில் பிரஸ்­தா­பித்தோம். கால்­ந­டைகள் பற்­றிய பட்­டி­யலை சமர்ப்­பித்தால் கால்­ந­டை­களை மேய்ச்சல் தரை­களில் அனு­ம­திப்­ப­தாக இரா­ணுவத் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டது.
இதனை நாம் ஆட்­சே­பித்தோம். இறு­தியில் உடன்­பாடு காணப்­பட்­டது. இந்தத் தீர்­மா­னத்­துக்கு அமை­வாக பண்­ணை­யா­ளர்கள் கால்­ந­டை­களை மேய்ச்சல் தரைக்கு கொண்டு சென்­ற­போது அதற்கு அனு­மதி இரா­ணு­வத்­தி­னரால் மறுக்­கப்­பட்­டது.
இதனை அடுத்து கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் தலை­மையில் மட்­டக்­க­ளப்பில் ஒரு விசேட கூட்டம் நடத்­தப்­பட்­டது. மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுக்­கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை இரா­ணுவம் ஏற்க மறுத்­ததன் மூலம் சிவில் நிரு­வாகம் நடை­பெ­ற­வில்லை என்றும் இரா­ணுவ ஆட்­சியே நடை­பெ­று­வது நிரூ­ப­ண­மா­கி­றது என்றும் இக்­கூட்­டத்தில் நான் பிரஸ்­தா­பித்தேன்.
இதனை ஏற்­க­ம­றுத்த அபி­விருத்திக் குழுவின் தலைவர் என்­னுடன் வாக்கு வாதத்­திலும் ஈடு­பட்டார். அதனை அடுத்து எது­வித முடிவும் எடுக்­கப்­ப­டாத நிலையில் கூட்டம் முடி­வ­டைந்­தது. முடிவு காணும் நிலை­யிலும் முத­ல­மைச்சர் நடந்து கொள்­ள­வில்லை.
நவம்பர் மாதம் 1 ஆம் திகதி இக்­கூட்டம் நடத்­தப்­பட்­டது. இந்த வரு­டத்தில் இதற்கு முன்னர் இரு தட­வையும் அதன் பின்னர் ஒரு தட­வை­யுமே மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக்­கூட்டம் நடத்­தப்­பட்­டுள்­ளது.
எனவே, இந்த வரு­டத்தில் அபி­வி­ருத்திக் குழுக்­கூட்டம் கிர­ம­மாக நடத்­தப்­ப­ட­வில்லை. அடுத்த வரு­டத்தில் இவ்­வா­றான நிலைக்கு இட­ம­ளிக்க முடி­யாது.
இதன்­படி திரு­கோ­ண­ம­லையில் நடை­பெற்ற கூட்­டத்தில் மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக்­கூட்­டங்­களில் காணிப் பிரச்­சினை குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்­கு­மாறு தீர்மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.
மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக்­கூட்­டங்­களில் ஏற்ெ­க­னவே முடிவு எடுக்க முடி­யாத நிலை ஏற்­பட்­ட­தா­லேயே விசேட கூட்டங்கள் இரண்டு கூட்­டப்­பட்­டன. அதன் பின்னர் மீண்டும் அபி­வி­ருத்திக் குழு­வுக்கு கொண்டு செல்­வது காலத்தை கடத்தும் செய­லாகும். இது ஒரு சதி முயற்சி என நாம் கரு­து­கிறோம். இதற்கு கிழக்கு மாகாண சபையும் துணை போகி­றதா என்ற சந்­தேகம் எமக்கு எழுந்­துள்­ளது.
சுமார் 25 ஆயிரம் கால்­ந­டை­க­ளுக்கு மேய்ச்சல் தரை இல்லை. அறு­வ­டைக்கு இன்­னமும் 2 மாதங்கள் உள்­ளன. அது­வரை இவற்றைக் கட்டி தீனி வழங்க முடி­யாது. இதனால் பண்­ணை­யா­ளர்கள் பெரும் அவ­தி­யு­று­வ­துடன் கால் நடை­களும் பட்­டி­னிச்­சாவை எதிர்­நோக்­கி­யுள்­ளன. இது வாழ்­வா­தா­ரத்தை நசுக்கும் செய­லாகும்.
திரு­கோ­ண­மலை தீர்­மா­னத்­துக்கு அமைய மாவட்ட அபி­வி­ருத்தி குழுக்­கூட்­டங்­களை உட­ன­டி­யாக கூட்­டு­வ­தற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில், தற்­போது பாரா­ளு­மன்றம் நடை­பெ­று­கின்­றது.
வரவு செல­வுத்­திட்ட விவாதம் முடி­வ­டைந்த பின்னர் அபி­வி­ருத்தி குழுக்­கூட்­டத்தைக் கூட்டி மேய்ச்சல் தரை பிரச்சினையை ஆராயும்போது மேய்ச்சல் தரையில் அத்து மீறி விவசாயம் செய்துள்ள வெளி மாவட்டத்தினர் அறுவடையை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவர்.
இதனால் பாதிக்கப்படுபவர்கள் தமிழ் பண்ணையாளர்களே. எனவே, அபிவிருத்தி குழுவின் தீர்மானம் மீறப்படுமானால் அங்கு சிவில் நிருவாகம் இல்லை என்பது புலனாகிறது. இதை எடுத்துக் கூறுவதில் என்ன தவறு உள்ளது? இவ்வாறு அவர் கருத்துத் தெரிவித்தார்
« PREV
NEXT »

No comments