Latest News

November 25, 2013

எவராவது கொலை அச்சுறுத்தல் விடுத்தால் பிரஜைகள் குழு மூலம் பொலிஸில் முறையிடுங்கள்
by admin - 0

எவ­ரா­வது உங்­க­ளுக்கு தொலை­பேசி மூல­மா­கவோ அல்­லது வீட்டில் வந்து நேர­டி­யா­கவோ கொலை அச்­சு­றுத்தல் விடுத்தால் மன்னார் பிர­ஜைகள் குழு­வி­னூ­டாக பொலிஸில் முறைப்பாடு செய்­யுங்கள். அதற்கு எங்­க­ளது ஒத்­து­ழைப்பு இருக்கும் என்று வட­மா­காண சபை உறுப்­பி­னரும், சட்­டத்­த­ர­ணி­யு­மான எஸ்.பிறிமுஸ் சிராய்வா இவ்­வாறு தெரி­வித்தார்.
மன்­னாரில் தற்­பொ­ழுது தொலை­பேசி மூலமும், நடு இரவில் வீடு­க­ளுக்குச் சென்றும் தாங்கள் புல­னாய்வு பிரி­வினர் எனக் கூறி பொது­நலப் பணி­களில் ஈடு­ப­டுவோர் மீது கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்டு வரு­கி­றது. இதனைக் கண்­டித்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை மன்னார் பொலிஸ் அதி­கா­ரி­க­ளி­டமும், மன்னார் மாவட்ட மேல­திக அரச அதிபர் மற்றும் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளி­டமும் மேற்­கூ­றப்­பட்ட விட­ய­மாக மக­ஜர்கள் கைய­ளிக்­கப்­பட்­டன.
மன்னார் மாவட்ட பிர­ஜைகள் குழுவின் ஏற்­பாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட இந் நிகழ்வைத் தொடர்ந்து வட மாகாண சபை உறுப்­பி­னரும், சட்­டத்­த­ர­ணி­யு­மான எஸ். பிறிமுஸ் சிராய்வா மன்னார் பிர­ஜைகள் குழு அலு­வ­ல­கத்தில் நடத்­திய ஊட­க­வி­ய­லா­ளர்­களின் மாநாட்டில் பாதிப்பு அடைந்தோர் முன்­னி­லை­யில் உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
எமது குங்­குமப் பொட்­டுக்கள் நிலைக்­குமா, நிலைக்­காதா என்ற ஏக்­கத்தில் காணா­மற்­போன தங்கள் கண­வரைத் தேடித் திரியும் மனை­வி­ய­ரையும், தங்கள் பிள்­ளைகள், உற­வுகள் திரும்பி வரு­வார்­களா? என்ற நிலையில் தங்கள் உற­வு­களைத் தேடுவோர் மீதும், இதற்கு உறு­துணை புரியும் பொது­ந­ல­வா­தி­க­ளுக்கும் தற்­பொ­ழுது மன்­னாரில் தொலை­பேசி மூலமும் நேர­டி­யா­கவும் அச்­சு­றுத்தல் இடம்­பெற்று வரு­கின்­றது.
பயத்தின் கார­ண­மாக பலர் இச் சம்­ப­வங்­களை வெளிக்­கொ­ண­ராமல் இருக்­கின்­றனர்.
இது தற்­பொ­ழுது உச்சக் கட்­டத்­துக்கு செல்­வ­தை­யிட்டு நாம் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கும், ஊட­கத்­து­றை­யி­ன­ருக்கும் தெரி­யப்­ப­டுத்தி, இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்க முனைந்­துள்ளோம்.
காணாமற் போன­வர்­களை நீங்கள் தேடினால் நீங்­களும் காணாமல் போய்­வி­டு­வீர்கள் என அச்­சு­றுத்­தப்­ப­டு­கின்­றனர். இந்த அரசு மிகவும் அநா­க­ரி­க­மான முறையில் படை­யி­னரை உரு­வாக்கி வைத்­துள்­ளது.
பொது­மக்­க­ளுக்­காக தன்னை அர்ப்­ப­ணித்து செயற்­படும் தேசிய மீனவ ஒத்­து­ழைப்பு இயக்க மன்னார் அமைப்­பாளர் சுணே­ஸுக்கு அண்­மைக்­கா­ல­மாக தொலை­பேசி அச்­சு­றுத்­தலும் கடந்த புதன்­கி­ழமை இரவு வீட்­டுக்குச் சென்று கொலை அச்­சு­றுத்­தலும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.
இவை தொட­ரக்­கூ­டாது என்­ப­தற்­காக மன்னார் பிர
ஜைகள் குழு மன்னார் ஆயர், தென்­ப­குதி தேசிய மீனவ ஒத்­து­ழைப்பு இயக்கம் மற்றும் பொது­மக்கள் எல்­லோரும் இணைந்து இப்­போ­ராட்­டத்தை நடத்­தி­யுள்ளோம்.
எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான விட­யங்கள் நடை­பெற வழி­ச­மைக்­கப்­ப­ட­மாட்­டாது என பொலிஸார் எமக்கு உத்­த­ர­வாதம் அளித்­துள்­ளனர்.
இருந்தபோதும் எவராவது சீருடையின்றியும், இரவில் வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் அதற்கு ஒத்துழைக்காது எமக்குத் தெரியப்படுத்துங்கள். அத்துடன் தொலைபேசியில் அச்சுறுத்தல் வரும்போது அதன் இலக்கத்தை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments