இன்று காலை மாத்தறை காவற்துறை நிலையத்தில் சரணமடைந்தள்ளார். மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் குழு மோதல் தொடர்பில் மங்கள சமரவீரவையும், அவருடன் மேலும் 11 பேரையும் கைது செய்யுமாறு நேற்றைய தினம் மாத்தறை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்அடிப்படையிலேயே இன்று காலை அவர் சரணடைந்திருப்பதாக
தெரிவிக்கப்படுகிறது. குறித்த மோதல் சம்பவத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் தென்மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் தந்தை உள்ளிட்ட 25 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட
பேரணி ஒன்றின் போது, மங்கள சமரவீரவின் ஆதரவாளர்கள் சிலர் அவர்கள்
மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே நீதிமன்றம்
இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.
No comments
Post a Comment