Latest News

October 07, 2013

மாவீரர்களது கனவிற்கு கல்லறை கட்ட முயற்சிக்க வேண்டாம்! விக்னேசுவரனிற்கு காசிஆனந்தன் அய்யா எச்சரிக்கை!!
by admin - 0

வடமாகாணசபைத் தேர்தல் முடிவு. தமிழர்களின் வெற்றியா, ராசபக்சேவின் சூழ்ச்சியா?
என்பது குறித்து தந்தித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மக்கள் முன்னால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே காசிஆனந்தன் அய்யா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். 
 
வெற்றிபெற்றால் மாவீரர் கல்லறைகளை மீண்டும் கட்டுவோம் எனக்கூறினார்களே என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காசிஆனந்தன் அய்யா, மாவீரர்களிற்கு கல்லறை கட்டுவதை விட்டுவிட்டு மாவீரர்களது கனவிற்கு கல்லறை கட்ட முயற்சிக்க வேண்டாம் என தமிழீழக் கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்துள்ள விக்னேசுவரனிற்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார். 
 
அறுபது ஆண்டுகளாக எமது இனம் சுமந்துவந்த கனவான தமிழீழத்தை கைவிடுமாறு கோருவதற்கு விக்னேசுவரன் உள்ளிட்ட யாருக்கும் உரிமையில்லை என ஆவேசமாகக் குறிப்பிட்டார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் பேசவோ, ஆர்பாட்டம் நடத்தவோ முடியாத நிலையில் எவ்வாறு போராடப்போகின்றார்கள் என்பதை அவர்கள்தான் கூறவேண்டும். 
 
ஒன்றுபட்ட இலங்கைக்குள் போராடட்டும் நாங்கள் வரவேற்கின்றோம். முடிவில் தோல்வியடைவது நிச்சயம். இந்த முயற்சிகளில் அடையும் தோல்வியானது எமக்கு வெற்றியாகவே அமையும். யார் எந்த அடிப்படையில் போராடினாலும் முடிவில் தமிழீழம்தான் தீர்வு என்பதில் வந்துநிற்பார்கள். என்ன நாங்கள் விரைவாக பயணிக்கின்றோம். மற்றவர்கள் தாமதமாக வருவார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். அனைவரும் அந்த இலக்கில் வந்து நிற்பது நிச்சயம். 
 
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அந்த மண்ணில் ஆயுதப்போராட்டம் நடைபெறுவது உறுதி. அதற்கு உலகத்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார். 
 
« PREV
NEXT »

No comments