Latest News

October 03, 2013

வரவு செலவு திட்டம் நவம்பர் மூன்றாம் வாரத்தில் சமர்ப்பிக்கப்படும்!
by Unknown - 0

இலங்கையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பிரேரணை எதிர்வரும் நவம்பர் மூன்றாம் வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் அதனை முன்வைக்கும் நடவடிக்கை, நிதியமைச்சராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து வரவு செலவு திட்ட உரை பாராளுமன்றத்தில் ஜனாதிபதியினால் நவம்பர் 21ம் திகதி நிகழ்த்தப்படும்.
இதனிடையே, இந்த முறை வரவு செலவு திட்டத்தில் அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு மேற்கொள்ளப்படாவிட்டால், பாரிய தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய தொழிற் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் ஊடக செயலாளர் சுனில் டி சில்வா இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
« PREV
NEXT »

No comments