பிரதமர் டி.எம். ஜயரட்ன மற்றும் முன்னாள் முதலமச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க ஆகியோரின் மகன்மார் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சிக்குள் இளைஞர் கிளர்ச்சி ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவின் இறுதிச் சடங்கின் போது அவரது மகனும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
தனது தந்தைக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரை அழைத்து எச்சரிக்கை விடுக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரதமர் டி.எம். ஜயரட்னவின் மகன் அனுராத ஜயரட்ன பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் கண்டியில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்.
அவரது ஆதரவாளாகள் இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இவ்வாறு போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment