Latest News

September 25, 2013

உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஊடகவியலாளர்கள் கடமையாற்றுகின்றனர்
by admin - 0

உல­கத்­தி­லுள்ள சகல ஊட­க­வி­ய­லா­ளர்­களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தமது கட­மையை செய்ய வேண்­டி­ய­வர்­க­ளாக உள்­ளனர். இதற்கு இலங்­கையும் விதி­வி­லக்­கா­ன­தல்ல என பிர­பல எழுத்­தா­ளரும் வைத்­தியக் கலா­நி­தி­யு­மான இரா­ஜ­தர்­ம­ராஜா தெரி­வித்தார்.
நீங்­களும் எழு­தலாம் வாசகர் வட்­டத்தின் ஏற்­பாட்டில் பெளர்­ணமி தின நிகழ்வு கடந்த வியா­ழக்­கி­ழமை திரு­கோ­ண­மலை விக்­னேஸ்­வரா மகா வித்­தி­யா­ல­யத்தில் எஸ்.ஆர். தன­பா­ல­சிங்கம் தலை­மையில் நடை­பெற்­றது. இதில் பேனா உல­கமும் ஆதிக்க உல­கமும் என்னும் பொருளில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
ஆதிக்க சக்­தி­க­ளுக்கு எதி­ராக எவர் ஒருவர் தனது பேனாவை பயன்­ப­டுத்­து­கி­றாரோ அவர் உயிரை கையில் பிடித்துக் கொண்டே கட­மையை செய்ய வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர். அண்­மையில் சஷ்­மிகா பனர்ஜி என்ற இந்­திய நாவ­லா­சி­ரி­யரும் பெண்­ணியல் வாதி­யு­மான ஒருவர் ஆப்­கா­னிஸ்­தானில் வைத்து சுட்டுக் கொல்­லப்­பட்டார். தலி­பான்­களின் அட்­டூ­ழி­யங்­களை நாவ­லாக எழு­தி­ய­மைக்­காக இவர் சுட்டுக் கொல்­லப்­பட்டார். இந்த நிலை இலங்­கை­யையும் விட்டு வைக்­க­வில்லை. சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்க, ஊட­க­வி­ய­லாளர் சிவராம், வீர­கே­சரி மட்­டக்­க­ளப்பு ஊட­க­வி­ய­லாளர் நடேசன் இதே­போன்று யாழ்ப்­பா­ணத்தில் திரு­கோ­ண­ம­லையில் எத்­த­னையோ ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டார்கள்.
இவை போன்ற ஏரா­ள­மான சம்­ப­வங்கள் உலகில் நடந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன. பேனா விற்­பன்­னர்கள் கொல்­லப்­ப­டு­கி­றார்கள். சிறை வைக்­கப்­ப­டு­கின்­றார்கள். எந்த எழுத்­தாளன் ஒருவன் ஆதிக்க சக்­தி­களை எப்­போது விமர்­சிக்க வெளிக்­கி­டு­கி­றானோ அவ­னு­டைய முடிவு சோக முடி­வா­கவே காணப்­ப­டு­கி­றது. இவை இன்று நேற்று அல்ல உலகம் தோன்­றிய காலத்­தி­லி­ருந்து நடை­பெற்று வரும் சம்­ப­வங்­க­ளாகும். இந்த அநி­யா­யத்­துக்கு கார­ண­மென்ன? இது ஒரு ஒவ்­வாமை நோய். ஆதிக்க சக்­திகள் தம்மை மேலாக கருதுகிறார்கள், உலகத்தின் பாதுகாவலர் தாமே என உரிமை கோருகின்றார்கள். தம் மீது கேள்வி கேட்க முடியாது என்று கருதுகிறார்கள். இந்த நிலையில் எழுதுகோல் விற்பன்னர்கள் எதிர்ப்பு நிலை இவ்வாறு ஆக்கப்படுகிறது என்றார்.
« PREV
NEXT »

No comments