Latest News

September 22, 2013

'மக்கள் பெரும் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்' - விக்னேஸ்வரன்
by admin - 0

 வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும்
பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத்
தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரான சி.வி.
விக்கினேஸ்வரன் அவர்கள்
பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்
வெளியானதை அடுத்து, எமது நிருபரிடம் பேசிய
அவர், இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த
மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும், அதேவேளை மக்கள்
தம்வசம் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்
என்றும் குறிப்பிட்டார். சம்பந்தர் பெருமிதம் இந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தன் அவர்கள், மக்கள்
சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள் என்றும், அவர்கள்
தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள் என்றும்,
அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் நடப்போம் என்றும் கூறினார். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள எமது செய்தியாளர், அங்கு தேர்தல்
முடிவுகள் வந்த பின்னர் நிலைமை ஓரளவு அமைதியாக இருப்பதாகவும்,
காலையில் எந்தவிதமான ஆரவார தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களையும்
காணமுடியவில்லை என்றும் கூறினார்.
« PREV
NEXT »

No comments