தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஸ்ரீலங்கா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் இருந்து அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு விசாரணைகளுக்காக சமூகமளிக்குமாறு கூறியுள்ளனர்.
No comments
Post a Comment