மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் மகள்தான் கயல்விழி. அவருக்கும், சீமானுக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இந்தப் பணிகளில் தமிழர் தலைவர்களான பழ. நெடுமாறன், மறைந்த இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
இதையடுத்து இன்று காலை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் திருமணம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி திருமணம் நடந்தேறியது.
பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். பல்வேறு தமிழர் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், பல்துறை பெருமக்கள் திருமணத்தில் பங்கேற்றனர்.
திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக் கன்றுகள் நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்காக சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடுகளை இயக்குநர் அமீர் தலைமையிலான குழுவினர் மேற்பார்வையிட்டு கவனித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment