Latest News

September 08, 2013

2013 மாவீரர் நாள் இம்முறையும் எக்ஸெல் மண்டபத்திலேயே நடக்கும் !
by admin - 0

மண்டபத்திலேயே நடக்கும் என்று , பிரித்தானியாவில் இயங்கும் மாபெரும் மக்கள் சக்தி அமைப்பான TCC (தமிழர் ஒருங்கிணைப்பு குழு) சற்று முன்னர் அதிர்வுக்கு தெரிவித்துள்ளது. இம்முறை (2013) நவம்பர் மாதம்
27ம் நாள் ஒரு புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மண்டபம் திறக்கப்பட்டு, 11.30 க்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என மேலும் அறியப்படுகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளையும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) பூர்த்திசெய்துள்ளது. பாரிய மண்டபம், அதற்கான இருக்கைகள் , நிகழ்வுகள் , மாவீரர் குடும்பங்களை கெளரவித்தல் போன்ற ஏற்பாடுகள் அனைத்தும் தற்பொழுதே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. கடந்த 21 வருடங்களாக லண்டனில் மாவீரர் தினத்தை நடத்திவரும் அமைப்பினரே இம்முறையும் இதனைச் சிறப்பாகச் செய்யவுள்ளனர். மிகுந்த அனுபவமும் ஆட்பலமும் கொண்ட அமைப்பாக திகழும் TCC இப் பணியை செவ்வனே செய்து முடிக்கும் என்பதில் ஐயமில்லை. மக்கள் அன்றைய தினம் அலையெனத் திரண்டு வருவார்கள். தாயகக் கனவோடு சாவினைச் சந்தித்த சந்தனப் பேழைகளுக்கு அவர்கள் தமது அஞ்சலியைச் செய்வார்கள். Athirvu.com
« PREV
NEXT »

No comments