Latest News

September 13, 2013

ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்ந்தோர் தொடர்பிலான விசேட நிபுணர் இலங்கை வருகிறார்?
by Unknown - 0

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான விசேட நிபுணர் கலாநிதி Chaloka Beyani, D.Phil எதிர்வரும் டிசம்பரில் இலங்கை வருகைதரவுள்ளார்
இந்த வருகையை தாம் எதிர்ப்பார்த்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பங்கேற்றுள்ள இலங்கையின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், உண்மை மற்றும் நீதி தொடர்பான விசேட நிபுணர் Pablo de Greiff  இலங்கையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட போதே இந்த தகவல் வெளியிடப்பட்டது.
இதன்போது பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடைக்கால தீர்வுகளை காண வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் உண்மை மற்றும் நீதி தொடர்பான விசேட நிபுணர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை மக்களின் அபிலாசைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
« PREV
NEXT »

No comments