யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த மாணவர் ஒருவர் கொழும்பில் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணவரும் மீட்கப்பட்டுள்ளார் என மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றிய தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த மாணவர் ஒருவர் கனடா நாட்டுக்கு செல்வற்கான விசா பெற கொழும்பு சென்றிருந்தார்.
சந்தேக நபர்கள் அந்த மாணவருக்கு கல்கிஸ்சை பகுதியில் வைத்து பியருடன் போதைப் பொருள் ஒன்றை கலந்து அதனை குடிக்க கொடுத்து நினைவிழந்த பின்னர் அவரை கஹாத்துடுவ வெனிவெல்கொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வீட்டுக்கு கொண்டு சென்ற மாணவருக்கு நினைவு தெளிந்த பிறகு சந்தேக நபர்கள் அவரிடம் இருந்து அவரது வீட்டின் தொலைபேசி இலக்கத்தை பெற்று வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு மாணவரை விடுவிக்க 20 லட்சம் ரூபா கப்பம் கேட்டுள்ளனர்.
இது பற்றி கிடைத்தை முறைப்பாட்டை அடுத்து, மாணவரின் குடும்பத்தாரிடம் பேசப்பட்ட தொகையில் இருந்து 50 ஆயிரம் ரூபாவை பெற்று கொண்டதாக கூறப்படும் இரண்டு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ள பொலிஸார் மேலும் சில சந்தேக நபர்களை தேடும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment