Latest News

September 18, 2013

தன் குணத்தை மீண்டும் காட்டியது சிறிலங்கா ஹெய்டிப் பெண் மீது பாலியல் வல்லுறவு
by admin - 0

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர், 18வயதுப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை லியோகன் நகரில் உள்ள வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த போது குறிப்பிட்ட பெண்ணை சிறிலங்கா படைச்சிப்பாய் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். வீதிச் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படைச் சிப்பாய்,
குறித்த பெண்ணை அருகில் உள்ள யாருமற்ற கட்டடப் பகுதிக்குள் இழுத்துச்
சென்று இந்தக் கொடூரத்தைப் புரிந்துள்ளார். சமாதான நீதிவானின் பணிப்பின் பேரில், பாதிக்கப்பட்ட பெண் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை ஐ.நா உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன்னரும் ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய சிறிலங்காப் படையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments