Latest News

September 11, 2013

படுகொலையாளிகளை கூண்டில் ஏற்ற முருகதாசன் திடலில் அணிதிரளுங்கள் -பழ.நெடுமாறன்அழைப்பு!
by admin - 0

அப்பாவி தமிழ்மக்கள் பதைக்க பதைக்க படுகொலை செய்தவர்களை கூண்டில் ஏற்றி பன்னாடு விசாரிக்க வேண்டும் என்பதற்காக ஜெனீவா முன்றலில் முருகதாசன் திடலில் எதிர்வரும் 16ஆம் நாள் அணிதிரள்கின்றார்கள் அனைத்து புலம்பெயர் மக்களும் இதில் கலந்துகொள்ளவேண்டும் இது திருப்பு முனையினை ஏற்படுத்தபோகும் போராட்டம்..
துயரத்தின் கடலில் மூழ்கி தவிக்ககூடிய தமிழர்களை கரையேற்றுவதற்காக உலசமுதாயம் அந்த முயற்சியில் உடனடியாக ஈடுபட்டாக வேண்டும் என்பதற்கா இந்த போராட்டம் ஐ.நா முன்றலில் நடைபெறுகின்றது. இதில் அனைத்து புலம்பெயர் தமிழர்களும் கலந்துகொண்டு எங்கள் குரலினை ஓங்கி ஒலிக்க செய்யவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு அந்த கடமையினை செய்ய எதிர்வரும் 16 ஆம் நாள் ஜெனீவா நகருக்கு வாருங்கள் .
ஐ.நா முன்றலில் அலைஅலையாக கூடுங்கள் உரக்க குரல் எடுத்து தமிழர்களின் கோரிக்கையினை உலகிற்கு தெரிவிக்க வேண்டுகின்றேன் இந்த ஒற்றுமையின் மூலம் துயரக்கடலில் மூழ்கியிருக்கம் தமிழ்மக்களின் விளிகளில் பெருகும் நீரினை துடைக்க முடியும் என்ற நம்பிக்கையில் திரண்டு வாருங்கள் என்று உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments