அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதேச சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி பல்லைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளனர்.
இந்த பல்கலைக்கழக பேராசிரியர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க முடியும்.
இம்மாதம் 12ம் திகதி முதல் 20ம் திகதி வரை பிரித்தானியாவில் நடைபெறும் விசேட ஆய்வொன்றில் பங்கேற்பதற்காக செல்வதாக கூறி, இந்த பேராசிரியர்கள் இலங்கையில் இருந்து சென்றுள்ளதாக தெரியவருகிறது என்றார்.
No comments
Post a Comment