Latest News

August 15, 2013

லண்டன் சென்றுள்ள பேராசிரியர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும்!- உயர்கல்வி பிரதியமைச்சர்!
by admin - 0

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் லண்டனில் நடைபெறும் கருத்தரங்கொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளதாக கூறப்படும் இலங்கை பல்கலைக்கழகங்களை சேர்ந்த நான்கு பேராசிரியர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என உயர்க்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதேச சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி பல்லைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளனர்.
இந்த பல்கலைக்கழக பேராசிரியர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க முடியும்.
இம்மாதம் 12ம் திகதி முதல் 20ம் திகதி வரை பிரித்தானியாவில் நடைபெறும் விசேட ஆய்வொன்றில் பங்கேற்பதற்காக செல்வதாக கூறி, இந்த பேராசிரியர்கள் இலங்கையில் இருந்து சென்றுள்ளதாக தெரியவருகிறது என்றார்.
« PREV
NEXT »

No comments