Latest News

August 28, 2013

உயிரிழந்ததாக கருதப்பட்ட பாலகன் திரும்பி வந்த தருணம் - ஒரு தந்தையின் நெஞ்சை உருக்கும் பாசம் - காணொளி
by admin - 0

சிரியாவில் அரச படைகள் அண்மையில் நடத்தியதாகக் கூறப்படும் இரசாயனத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட தனது மகன் உயிருடன் இருப்பதனை தெரிந்துகொண்ட தந்தையின் உணர்வினைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியாகி பார்ப்பவரின் மனதை உருக்கியுள்ளது.

சிரியாவின் தென்மேற்கு நகரான சமால்காவில் வைத்தே இக்காணொளி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 7நிமிடங்கள் ஓடக்கூடிய இக்காணொளியானது இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது.
வொஷிங்டன் போஸ்டின்  மெக்ஸ் பிஸ்ஸரே இக்காணொளியை முதற்தடவையாக கண்டுபிடித்துள்ளார்.
தற்போது இக்காணொளியானது பல இலட்சக்கணக்கான தடவை பார்க்கப்பட்டுள்ளது.





« PREV
NEXT »

No comments