Latest News

August 11, 2013

ஆளு­நரின் கொட்டம் வடக்கு மாகா­ண­ ச­பையில் அடக்­கப்­ப­டுமா?
by admin - 0

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைக்கான சட்டமூலம் கொண்டு வரப்பட்டபோது அதனை ஆளுநர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, அது உப குழுவுக்கு அனுப்பப்பட்டது.


இவ் உப குழுவில் தமிழர் தரப்பில் இரண்டு த. தே. கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களாக சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன்.செல்வராசா இவர்கள்கூட இதற்கு ஆதரவுதரவில்லை என்பது என்னைப் பொறுத்தவரையில் கவலையான விடயம். 


இது தொடர்பாக இவர்களுடன் கதைத்தும் உள்ளேன். இது மத்திய அரசுக்கும் மாகாண சபைக்குமான ஒரு பொதுவான சட்டமாக உள்ள காரணத்தினால் இதனை இவர்கள் இரண்டுபேரும் வாதிட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாது இன்று 13ஐப்பற்றி பெரிய அளவில் குரல் கொடுப்பவர்களாக உள்ளனர்.சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன்


சிறு­பான்மை மக்­களின் ஆளும் அதி­காரப் போராட்­டத்தின் மூலம் பெறப்­பட்ட மாகாண சபை ஊடான அதி­கார பர­வ­லாக்கல் என்­பது "வலக்­கை­யினால் கொடுத்து இடக்­கை­யினால் எடுக்­கப்­பட்ட ஒன்­றுதான்" என்­பார்கள். காரணம் என்­ன­வென்றால் ஜன­நா­யக முறைப்­படி தெரிவு செய்­யப்­பட்ட முத­ல­மைச்சர் ஒருவர் இருக்­கத்­தக்­க­தாக உள்ள போது முழு­மை­யான செயற்­பாட்­டுக்கு ஒரு ஆளு­நரை நிய­மிப்­ப­தனால் முத­ல­மைச்­சரின் அதி­கா­ரங்­களை பிர­யோ­கிக்க முடி­யாத நிலை இங்கு ஏற்­ப­டு­கின்­றது.

கடந்த முற்­பது வருட ஆயுத நெருக்­க­டியின் கீழ் இருந்த வடக்கு, கிழக்கு விடு­விக்­கப்­பட்ட பின்னர் கூட ஆயுத மணம் மக்கள் மத்­தியில் இல்­லாமல் போனாலும், இதனை இயக்­கிய வழி­ந­டத்­தி­ய­வர்­களின் அதி­காரம், ஆதிக்கம் இன்னும் வட­கி­ழக்கை விட்டு அகலாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. என­வேதான் எதிர்­வரும் வட மாகாண சபைத் தேர்­த­லுக்குப் பின்­ன­ரா­வது வடக்­குக்­கான ஆளுநர் இந்த நிலை­யி­லி­ருந்து வடக்கு மக்­களை பார்ப்­பாரா என்று பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

ஆளுநர் நிய­மனம்

எமது நாட்டின் ஜன­நா­யக சோஷ­லிஸ குடி­ய­ரசுத் சட்­டத்­துக்­க­மைய மாகா­ண­ ச­பையின் நிதி, நிர்­வாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவும் அவற்­றினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் ஜனா­தி­ப­தியின் நேரடி பிர­க­ட­னத்தின் கீழ் நிய­மிக்­கப்­படும் ஒரு­வரே ஆளு­ந­ராகும். இவ­ருக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்­கு­ழுவில் உள்ள பிர­தம செய­லாளர், ஏனைய அமைச்சின் செய­லாளர் மற்றும் திணைக்­களத் தலை­வர்­க­ளி­டமும் பகிர்ந்­த­ளிக்­கப்­படும். இவ்­வா­றான மாகாண நிதி, நிர்­வாக நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்தும் அதி­கா­ரமும் ஆளு­ந­ரிடம் உள்­ளது.

முத­ல­மைச்சர் நிய­மனம்

முத­ல­மைச்சர் என்­பவர் மக்­களின் ஏகோ­பித்த வாக்­கினைப் பெற்ற அல்­லது செல்­வாக்­கினைப் பெற்ற ஒரு­வரும், சட்ட திட்­டங்­களை மதித்து மாகாண சபை­யினை நிர்­வ­கிக்கும் வல்­லமை கொண்ட ஒரு­வரே, அக்­கட்­சிசார் தலை­மை­யினால் சிபார்சு செய்­யப்­பட்டு ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­ப­டுவார். அத்தோடு அம் மாகாணத்துக்கான அமைச்சர் தெரி­வினை அக்­கட்சி மேற்­கொண்­டாலும் நிய­மனம் என்­பது ஆளுந­ரி­னா­லேயே மேற்­கொள்­ளப்­படும். இவர்கள் மக்­களின் தேவை­களை இனம் கண்டு அவற்­றினைப் பூர்த்தி செய்­வ­துடன் மக்­களின் அபி­வி­ருத்தி தொடர்­பான செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுப்­ப­வர்­க­ளாக காணப்­ப­டுவர்.

நிதிப்­பி­ர­யோகம் என்­றாலும் சரி அல்­லது எடுக்­கப்­பட்ட புதிய தீர்­மா­னங்­க­ளாக இருந்­தாலும் அவற்­றினை ஆளுநர் அங்­கீ­க­ரிக்க வேண்டும். அதேபோல் ஆளு­நரின் நிதி அல்­லது அவ­ருடன் தொடர்­பு­பட்ட விட­யங்­க­ளாக இருந்தால் அதனை மாகாண சபை அங்­கீ­க­ரிக்க வேண்டும். இவ்­வாறு இரண்டு பேரையும் ஒன்­றோடு ஒன்று இறுகக் கட்­டிப்­போட்ட நிலையே இந்த மாகாண சபையின் சவா­லாக காணப்­ப­டு­கின்­றது.

வட­கி­ழக்கு மக்­களின் பிரச்­ச­னைக்­கான தீர்­வாகக் கொண்டு வரப்­பட்ட மாகாண சபை­யா­னது ஏனைய ஏழு மாகாண சபை­கள் சுமு­க­மாக இயங்கும் போது வட­கி­ழக்­காக இருந்த போதும் சரி கிழக்கு மாகாண சபை­யாக இருந்த போதிலும் இரண்டு தரப்­பா­ருக்கும் இடை­யி­லான முரண்­பாடு வலு­வாக உள்­ளது. ஏன் அன்­மை­யில்­கூட கிழக்கு மாகாண சபையில் உள்ள முரண்­பாட்­டுக்­காக ஜனா­தி­ப­தி­யினை சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஆளு­நரை மீறி செயற்­ப­ட­மு­டி­யாது “சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன்”

கிழக்கு மாகா­ண­ச­பையின் அரச தரப்பில் இருந்து தெரிவு செய்­யப்­பட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபையின் முத­ல­மைச்­சரும், தற்­போ­தைய கிழக்கு மாகாண உறுப்­பி­னரும், கிழக்கு மாகாண அபி­வி­ருத்­தியின் ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­க­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தனைத் தொடர்பு கொண்டு “தங்கள் ஆட்­சிக்­கா­லத்தில் ஆளுநர் தொடர்­பாக தாங்கள் எதிர்­நோக்­கிய சவால்கள் என்ன” என்று வின­விய போது அவர் 
தெரி­வித்­த­தா­வது,

ஆளுநர் என்­பவர் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­ப­டு­கின்ற பிர­தி­நிதி. நாங்கள் ஆளும் கட்­சி­யாக இருந்­தாலும் ஆரம்­பத்தில் எங்­க­ளுக்­கி­டையில் சுமு­க­மான நிலையே காணப்­பட்­டது. ஆனால் காலப்­போக்கில்; அடிக்­கடி முரண்­பா­டுகள் இரு­வ­ருக்­கி­டையில் ஏற்­பட்­டது. குறிப்­பாக சுகா­தார ஊழியர் தொடர்­பான நிய­ம­னத்தின் போது அதற்கு ஆளுநர் அனு­ம­திக்­க­வில்லை. பின்னர் இது அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்­துக்­க­மைய மேற்­கொள்­ள­வேண்டும் என கூறப்­பட்­டது. இதன் கார­ணத்­தினால் நாங்கள் நிய­மிக்க தீர்­மா­னித்­த­வர்­க­ளைக்­கூட நிய­மிக்க ஆளுநர் ஒத்­து­ழைக்­க­வில்லை.

அதேபோல் கிழக்கு மாகாண சுற்றுலாதுறைக்கான சட்­டமூலம் கொண்டு வரப்­பட்ட போது அதனை ஆளுநர் நாடா­ளு­மன்­றத்­துக்கு அனுப்பி அது உப குழு­வுக்கு அனுப்­பப்­பட்­டது. இவ் உப குழுவில் தமிழர் தரப்பில் த.தே.கூ. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், பொன். செல்­வ­ராசா. இவர்­கள்­கூட இதற்கு ஆத­ர­வு­த­ர­வில்லை என்­பது என்னைப் பொறுத்­த­வ­ரையில் கவ­லை­யா­ன­வி­டயம். இது தொடர்­பாக இவர்­க­ளுடன் கதைத்தும் உள்ளேன். இது மத்­திய அர­சுக்கும் மாகாண சபைக்­கு­மான ஒரு பொது­வான சட்­ட­மாக உள்ள கார­ணத்­தினால் இதனை இவர்கள் இரண்­டு­பேரும் வாதிட்­டி­ருக்­கலாம். ஆனால் அவ்­வாறு செய்­யாத இவர்கள் இன்று 13ஐப்­பற்றி பெரிய அளவில் குரல் கொடுப்­ப­வர்­க­ளாக உள்­ளனர்.

நான் அரச தரப்பைச் சேர்ந்­த­வ­னாக இருந்தும் அர­சினால் கொண்­டு­வ­ரப்­பட்ட நாடு நகர அபி­வி­ருத்திச் சட்­ட­மூலம் உட்­பட மூன்று சட்­டத்­துக்­கான அங்­கீ­கா­ரத்­தினை என்­னிடம் கேட்­டுக்­கொண்­டார்கள். இதற்­கான அங்­கீ­கா­ரத்­தினை கிழக்கு ஆளுநர் வழங்கியி­ருந்தார். ஆனால் நான் அவர்­க­ளுக்கு வழங்­க­வில்லை. ஏனெனில் இதன் மூலம் எமது கிழக்குப் பிர­தே­சத்தில் மத்­திய அரசு நினைத்த வேலை­களைச் செய்யும் போது எம்மால் அதனைத் தடுக்க முடி­யாது. ஏன், அண்­மையில் சிலை வைப்பு விவ­கா­ர­மா­னது இச் சட்டம் அங்­கீ­க­ரிக்­காத கார­ணத்­தினால் இப்­பி­ர­தே­சத்தில் இதனை நிறை­வேற்ற முடி­யாது போனது.

அதேபோல் கிழக்கு மாகா­ணத்­துக்­கு­ரிய கொடி­யினை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான ஒத்­து­ழைப்­பினை ஆளுநர் எங்­க­ளுக்கு தராத கார­ணத்­தினால் இதற்கும் முரண்­பட்டு சுசில் பிரேம்­ஜெ­யந்­தவின் ஆலோ­ச­னைக்­க­மைய கைவிட வேண்டி ஏற்­பட்­டது.

நாங்கள் பொலிஸ் ஆணைக்­குழு தொடர்­பான வரை­வினை மேற்­கொண்டு ஆளு­ந­ரிடம் வழங்­கிய போது அதனை சட்­டமா அதி­ப­ரிடம் அனுப்­பி­வைத்தார். இது தொடர்­பாக நாங்கள் அர­சாங்­கத்­துடன் கதைத்த போது அவர்கள் பொறுத்­தி­ருங்கள் என்று இழுத்­த­டித்­தார்கள். இத­னையும் மீறி முயற்சி எடுத்த போது ஆளு­னரும் நீங்­களும் முரண்­பட்­டீர்­க­ளாயின் மக்­க­ளுக்கு எதுவும் செய்ய முடி­யாது போகும் என்று ஜனா­தி­பதி தெரி­வித்த கார­ணத்­தினால் இதனை நாங்கள் கைவிட்டோம்.

வட­மா­காண சபையில் த.தே.கூ. வில் போட்­டி­யிடும் முதன்மை வேட்­பாளர் சி.வி விக்­னேஸ்­வரன் கூறு­வ­துபோல் இணக்க அர­சியல் மூலம் த.தே.கூ. மாத்­தி­ரமே வடக்கு மாகாண சபை­யினை அபி­வி­ருத்தி செய்ய முடியும். த.தே.கூ. வின் வழக்­க­மான எதிர்­ந­ட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வர்­க­ளாயின் மக்­க­ளுக்­கான சேவை­யினை மேற்­கொள்ள முடி­யாது. ஏன் என்றால் வடக்கு மாகாண சபையின் வரிப்­ப­ணத்­தினைக் கொண்டு மக்­க­ளது தேவை­களைப் பூர்த்தி செய்ய முடி­யாது. அதே­நேரம் தேசிய வரிப்­ப­ணத்தின் ஒரு பகு­தி­யினை வடக்­குக்குக் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் எம்மத்­தியில் இல்லை. ஆகவே அரசின் நிதி­யினைப் பெறவேண்­டு­மாக இருந்தால் ஆளு­ன­ருடன் இணைந்­துதான் போக­வேண்டும்.

அத்­தோடு இவர்கள் கூறும் 13ஆவது சரத்­தினை நாங்கள் வடக்கில் நடை­மு­றைப்­ப­டுத்­துவோம் என்­பது பாரிய முரண்­பாட்­டி­னையும், கால இழு­ப­றி­யி­னையும் ஏற்­ப­டுத்­து­வ­தோடு அது வடக்கு அபி­வி­ருத்­தி­யினை வெகுவாகப் பாதிக்கச் செய்யும். எனவே இவர்கள் வடக்கு மாகாண சபை­யினை இரண்டு பகு­தி­யாக பார்க்க வேண்டும். ஒன்று யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சத்­தினை அபி­வி­ருத்தி செய்ய வேண்டும் என்­பது. மற்­றது த.தே.கூ. வின் கொள்­கைகள்,கோட்­பா­டுகள் என்­ப­வற்­றினை நடை­மு­றைப்­ப­டுத்தல். இதில் முன்­னை­ய­துக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்டுமாக இருந்தால் இதற்கு அரசின் பாரிய பங்­க­ளிப்பு அவ­சியம். உதா­ர­ண­மாக வெளி­நாட்டு நிதி­யினை நேர­டி­யாக வடக்­குக்குக் கொண்­டு­வர முடி­யாது. அப்­ப­டியானால் அது தனி­நாடாக மாறி­விடும். எனவே இந்த நிதி­யினை வடக்­குக்குக் கொண்­டு­வர வேண்­டு­மாக இருந்தால் அது திறை­சே­ரி­யூ­டா­கவே வர­வேண்டும். இதற்கு அரசின் பாரிய பங்­க­ளிப்பு அவ­சியம்.

அதேபோல் 13ஆவது சரத்து, த.தே.கூ. வின் கொள்­கைகள், கோட்­பா­டுகள் என்­ப­வற்­றினை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மாக இருந்தால் அதற்கு சட்ட நட­வ­டிக்கை அப்­படி, இப்­படி என்று போவார்கள். அது கால இழு­ப­றி­யி­னையும், முரண்­பாட்­டி­னையும் இரு­வ­ருக்­கி­டையில் ஏற்­ப­டுத்தும். இதனால் பாதிக்­கப்­ப­டப்­போ­வது மக்­க­ளாகும்.

எனவே த.தே.கூ. ஆட்சி அமைத்தால் முத­ல­மைச்சர் அவர்­க­ளாக இருந்­தாலும் ஆளுநர் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­ப­டுவார். இவ் ஆளுநர் யாராக இருந்­தாலும் இவர் ஜனா­தி­ப­தியின் பிர­தி­நி­தி­யாக தொழில்­ப­டு­கின்ற கார­ணத்­தினால் அரசின் செயற்­பாடே இவரில் தொனிக்கும். ஆகவே இரண்­டு­பேரும் இணைந்து போனால் மட்டும்தான் வடக்கு மாகாண சபையினை நடாத்த முடியும். அவ்வாறு இணைந்து போகும் பட்சத்தில் த.தே.கூ. புதிய அத்தியாயத்தினை ஆரம்பிக்கின்றது எனலாம் என்றார்.
« PREV
NEXT »

No comments