Latest News

August 19, 2013

ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பட்டுக்கு CID கொலை மிரட்டல்
by admin - 0

மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும், சர்வதேச சுதந்திர ஊடகவியலாளருமான எஸ்.ஆர். லெம்பேட் என்பவருக்கு சற்று முன் (18-08-2013) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர் லெம்பேட் இலங்கை நேரப்படி (18-08-2013) ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 11.07 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த அவர்களிடம் தொலைபேசியூடாக முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த தினமன்று மாலை 6 மணியளவில் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் கறுப்பு நிற பிக்கப் வாகனத்தில் வந்த 3 நபர்கள் தன்னை வழிமறித்து அருகில் உள்ள கோந்தைப்பிட்டி மீனவர் வாடிக்கு குறித்த பிக்கப் வாகனத்தில் ஏற்றிச் சென்று விசாரித்ததகாவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு ஆதரவாக இந்த தேர்தலில் செயற்பட வேண்டாம் எனவும், தேர்தல் முடியும் வரை சற்று ஒதுங்கி நிற்குமாறும் தன்னை எச்சரித்துள்ளதாகவும் குறித்த குழு தன்னை கடும் தொனியில் எச்சரித்துள்ளதாக அவர் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
« PREV
NEXT »

No comments