கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தனது கவலையை தெரிவித்துள்ள அமெரிக்கா, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இச் சம்பவம் மூலம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைள் இத்தாக்குதல் சம்பவம் மூலம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இவ்வாறு மதஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
மேலும் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு இச்சம்பவம் தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைள் இத்தாக்குதல் சம்பவம் மூலம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இவ்வாறு மதஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
மேலும் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு இச்சம்பவம் தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments
Post a Comment