ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் சிலாபம் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வருகையில் இராணுவ பொலிசாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். சிலாபம் குருந்துவத்தை எனும் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றவராவார்.
சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் சிலாபம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இவர் இராணுவத்திலிருந்து தப்பி வந்ததன் காரணமாக இராணுவ பொலிசார் நீதிமன்றத்தின் அருகில் வைத்தே அவரைக் கைது செய்திருந்தனர். இவ்வாறு இராணுவ பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கணேமுல்ல இராணுவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சந்தேக நபருக்குரிய வழக்குத் தவணை சிலாபம் நீதிமன்றத்தில் இருந்தமையால் அவரை இராணுவ பொலிசார் சிலாபம் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்த போதே சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பில் இராணுவ பொலிசார் சிலாபம் பொலிசாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்
No comments
Post a Comment