அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலில் நீதவான் ஒருவர் வழங்கிய 1000 ரூபா நோட்டு போலியானதென தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஹோமாகம மஜிஸ்திரேட் நீதவான் சம்பவத்துடன் தொடர்புடைய நீதவானிடம் வாக்குமூலமொன்றை பெற்றுள்ளார்.
இதன்போது தான் நீதிமன்ற பதிவாளர் ஒருவர் மூலமாக தன்னிடமிருந்த காசோலை ஒன்றை வங்கியொன்றில் மாற்றி 14,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும் இதிலேயே குறித்த 1000 ரூபா இருந்ததாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த பதிவாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
No comments
Post a Comment