கச்சதீவில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்திய தேசிய கொடியேற்றப்படும் என, அந்த கட்சி யின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கச்சதீவில் தேசிய கொடியேற்ற வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடமும் அனுமதி கேட்போம். அங்கு நமது தேசிய கொடி பறக்க அனுமதி உள்ளது.
கச்சதீவில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்டவும் அங்கு இந்திய, தேசிய கொடி பறக்கவும் தமிழக மற்றும் மத்தியரசு, ஏற்பாடு செய்ய வேண்டும்.
அரசு கொடியேற்ற மறுத்தால் இந்து மக்கள் கட்சி சார்பில், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து கொடியேற்றி உரிமையை நிலை நிறுத்துவோம் என்றார்.
No comments
Post a Comment