உனது கணவர் காட்டில் இருக்கின்றார். இராணுவத்தினர் மீது தாக்குதல் நடந்தால் உன்னையும் உனது பிள்ளைகளையும் சுட்டுக்கொல்லுவோம் என அவுஸ்திரேலியாவில் அகதித்தஞ்சமடைந்துள்ள ஒருவரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தஏஜ் என்ற பத்திரிகை கூறுகின்றது. தனது இருபிள்ளைகளைகளையும் மனைவியையும் மட்டக்களப்பில் விட்டு 2006 ஆம் ஆண்டு அடைக்கலம் தேடி வெளிநாடு புறப்பட்ட இந்நபர் 2009 இல் அவுஸ்திரேலியா வந்தடைந்தார்.
விவசாயக்குடும்பத்தில் பிறந்த இவர் விடுதலைப்போராட்ட காலப்பகுதியில் மரணமடைந்த போராளிகளை தனது வாகனத்தில் ஏற்றி பின்தளத்திற்கு கொண்டுசெல்வதில் உதவி செய்ததாகவும் அந்த உதவியைக்கூட செய்யாமல் இருந்திந்தால் அதில் அர்த்தம் இல்லை எனவும் கூறுகின்றார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது விபரங்கள் வெளியிடப்படவில்லை. அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பான ஏசியோ இவரை பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக்கூறி இவருக்கான வதிவிட விசாவை வழங்கவேண்டாம் என அந்நாட்டு அரசை கேட்டுள்ளது.
இதே காரணத்தை கூறி இன்னும் 51 தமிழர்கள் பல ஆண்டுகளாக தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளனர். சித்தாந்த ரீதியாக விடுதலைப்புலிகளையும் அதன் ஆயுதவழியிலான தனிநாட்டுக்கான போராட்டத்தையும் ஆதரிக்கின்றார்கள் என்பதே இவர்கள் மீதான பொதுவான குற்றசாட்டாகும்.
அக்குற்றசாட்டை எதிர்த்து இவர்களால் நீதிமன்றத்திற்கு செல்லமுடியாது என்பது இன்னொரு துயரமாகும். அவுஸ்திரேலியாவில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒருபோதும் வன்முறைச்சம்பவங்களில் ஈடுபடவிடல்லை என்பதை சுட்டிக்காட்டும் அப்பத்திரிகை, ஒரேயொரு தடவை மட்டுமே விடுதலைப்புலிகளும் வெளிநாடு ஒன்றில் தாக்குதல் மேற்கொண்டிருந்தார்கள் எனவும் இலங்கையில் நிலவும் தமிழர்கள் மீதான அரசஅடக்குமுறைகளை கவனத்தில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளது.
விவசாயக்குடும்பத்தில் பிறந்த இவர் விடுதலைப்போராட்ட காலப்பகுதியில் மரணமடைந்த போராளிகளை தனது வாகனத்தில் ஏற்றி பின்தளத்திற்கு கொண்டுசெல்வதில் உதவி செய்ததாகவும் அந்த உதவியைக்கூட செய்யாமல் இருந்திந்தால் அதில் அர்த்தம் இல்லை எனவும் கூறுகின்றார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது விபரங்கள் வெளியிடப்படவில்லை. அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பான ஏசியோ இவரை பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக்கூறி இவருக்கான வதிவிட விசாவை வழங்கவேண்டாம் என அந்நாட்டு அரசை கேட்டுள்ளது.
இதே காரணத்தை கூறி இன்னும் 51 தமிழர்கள் பல ஆண்டுகளாக தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளனர். சித்தாந்த ரீதியாக விடுதலைப்புலிகளையும் அதன் ஆயுதவழியிலான தனிநாட்டுக்கான போராட்டத்தையும் ஆதரிக்கின்றார்கள் என்பதே இவர்கள் மீதான பொதுவான குற்றசாட்டாகும்.
அக்குற்றசாட்டை எதிர்த்து இவர்களால் நீதிமன்றத்திற்கு செல்லமுடியாது என்பது இன்னொரு துயரமாகும். அவுஸ்திரேலியாவில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒருபோதும் வன்முறைச்சம்பவங்களில் ஈடுபடவிடல்லை என்பதை சுட்டிக்காட்டும் அப்பத்திரிகை, ஒரேயொரு தடவை மட்டுமே விடுதலைப்புலிகளும் வெளிநாடு ஒன்றில் தாக்குதல் மேற்கொண்டிருந்தார்கள் எனவும் இலங்கையில் நிலவும் தமிழர்கள் மீதான அரசஅடக்குமுறைகளை கவனத்தில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment