Latest News

July 20, 2013

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்­பி­னர்­ யெஹியா அக்­கட்சியிலிருந்து வெளியேறுகின்றார்
by admin - 0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நட­வ­டிக்­கையில் அதி­ருப்தி கொண்­டுள்ள புத்­தளம் மாவட்ட முஸ்லிம் காங்­கிரஸ் அமைப்­பா­ளரும் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான யெஹியா ஆப்தீன் கட்­சி­யி­லி­ருந்து விலகி அர­சுடன் இணைந்­து­கொள்ள தீர்­மா­னித்­துள்ளார்.

முஸ்லிம் காங்­கி­ர­ஸ{டன் இணைந்து தான் 15 வரு­டங்­க­ளாக அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றேன். எனினும் அக்­கட்சி கிழக்­கிற்கும் வடக்­கிற்கும் மட்­டுமே முக்­கி­யத்­துவம் அளித்து அர­சியல் நடத்தி வரு­வ­தோடு ஏனைய பிர­தே­சங்­களை புறக்­க­ணித்து வரு­வ­தா­க­வும்­யெ­ஹியா குற்றம் சுமத்­து­கின்றார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தனது நிலைப்­பாடு குறித்து எனது அர­சியல் ஆலோ­ச­கர்­க­ளோடு கலந்­தா­லோ­சித்து அதன் முடி­வு­களை ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றை நடத்தி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வுள்ளேன் என்றார்.

இதே­வேளை, 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் மீதான திருத்­தப்­பி­ரே­ரணை வடமேல் மாகாண சபையில் வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­பட்­ட­போது அர­சுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­மைக்­காக முஸ்லிம் காங்­கிரஸ் கடந்த மாத இறு­தியில் கட்­சி­யி­லி­ருந்து யெஹியா ஆப்­தீனை தற்­கா­லி­க­மாக இடை­நீக்­கி­யி­ருந்­தது.

எனினும் அவர் அர­சாங்­கத்தின் அச்­சு­றுத்தல் கார­ண­மா­கத்தான் ஆத­ர­வாக வாக்­க­ளித்தி­ருந்­த­தாக கூறி கட்­சியின் தலை­மை­யிடம் மன்­னிப்­பு­கோ­ரி­யி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து நேற்று முன்­தினம் அவரை மன்­னித்து கட்­சியில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­ட­தாக முஸ்லிம் காங்­கி­ரஸின் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
« PREV
NEXT »

No comments