Latest News

July 07, 2013

புத்தகாயா விஹாரைக்கு அருகாமையில் தொடர் குண்டு வெடிப்பு: ஜனாதிபதி மஹிந்த அதிர்ச்சி
by admin - 0

 இந்தியாவின் புத்தகாயா விஹாரைக்கு அருகாமையில்
இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம்
தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
அதிர்ச்சி அடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி அறிந்து கொண்டதும்
அதிர்ச்சியடைந்தேன். சம்பவத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டு மக்களின்
சார்பிலும் எனது சார்பிலும் இரங்கல்
தெரிவித்துக்கொள்கின்றேன். குறித்த சம்பவம்
குறித்து விசாரணை நடத்தி தகவல்
தருமாறு இந்தியாவிற்கான
இலங்கை உயர்ஸ்தானிகருக்கு அறிவித்துள்ளேன்
என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தில்
இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். எனினும், சம்பவத்தில் இலங்கை யாத்திரிகர்கள்
எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என
தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 5.15 அளவில்
புத்தகயா விஹாரைக்கு அருகாமையில்
தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளன.
சம்பவத்தில் திபெத் நாட்டு பௌத்த
பிக்கு ஒருவர் காயமடைந்துள்ளார்.
« PREV
NEXT »

No comments