Latest News

July 20, 2013

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு
by admin - 0


யாழ்.பல்கலைக்கழகத்தை அண்மித்த
பரமேஸ்வரா சந்தியில், வீதியில்
புதைக்கப்பட்டிருந்த பெருமளவான
துப்பாக்கி ரவைகள் இன்று மதியம்
மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இவற்றை மீட்டுள்ளனர். வீதியில் பாலம் அமைக்கும் நோக்குடன் நிலத்தைக்
தோண்டியபோது இரண்டு பீப்பாய்களில்
மண்ணுடன் போட்டு இவை புதைக்கப்பட்டுள்ளன. இவற்றை இராணுவத்தினர் மீட்டு கொண்டு செல்ல முற்பட்டபோது, பொலிஸார் அவற்றை தடுத்து நிறுத்தி பொறுப்பேற்றுள்ளனர் இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில்
பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments