பாதிக்கப்பட்டு கேரளா மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ்
நடிகை கனகா, மரணமடைந்து விட்டதாக
சற்று முன்னர் இந்திய ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், தாம் நலமாக இருப்பதாக உருக்கமுடன் அவர் தெரிவித்துள்ளார். நடிகை கனகா குறித்த செய்தி வெளியானதும்,
அவரது சித்தப்பா ராம ஈஸ்வர லால்
அதனை மறுத்தார். அதே சமயம்
சென்னை ராஜா அண்ணமலைபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குள் கனகா கதவை உள்பக்கமாக
பூட்டியபடி இருந்துகொண்டிருப்பதாகவும்,
எவ்வளவோ கூப்பிட்டும் வெளியே வர
மறுப்பதாகவும் அவர் ஊடகங்களை தொடர்பு கொண்டு கூறினார். இதுகுறித்த தகவலால் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் கனகாவின் வீடு முன்னர் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் நலமாக உள்ளதாக கூறிய அவர், மரணமடைந்துவிட்டதாக வெளியான
செய்தி குறித்து வேதனை தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள தனது உறவினர்
No comments
Post a Comment