இரகசியத் திருமணம் செய்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளன. பாஞ்சாலங் குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் போன்ற பல பிரபல படங்களின்
இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானின் திருமணம்
குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்திகள் கிளம்பின. ஏற்கனவே ஈழத்தைச் சேர்ந்த விதவைப் பெண் போராளி ஒருவரை திருமணம் செய்யப்போவதாகவும்
கூறப்பட்டது ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் அமைந்துள்ளது தற்போதைய
தகவல். அதாவது முன்னாள் அமைச்சர், முன்னாள் சபாநாயகர், சிறந்த தமிழறிஞர், பேச்சாளர் என்று மக்களால்
பாராட்டப்பட்ட அமரர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான் சீமான் திருமணம் செய்துள்ளாராம். இவர்கள் இருவரது திருமணமும் ஏற்கனவே சீமன் கூறிய படி,.. தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன்
- மதிவதனி திருமணம் நடந்த தினம் அக்டோபர் 1ஆம் திகதி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தை ஏன் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்? மக்களுக்கு அறிவித்துவிட
வேண்டியதுதானே என்று அவரது நலம் விரும்பிகள்
தொடர்ந்து சீமானை வலியுறுத்தி வருகிறார்கள். இதையடுத்து, ஆகஸ்ட் 27ஆம் திகதி திருமண
வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
1 comment
மக்களுக்கு நன்மை பயக்கும் பொதுத் தொண்டில் ஈடுபடும் தலைவர்கள் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி ஒளிவு மறைவு இருக்க கூடாது.
நமது தமிழ் நாட்டில் முதல் அமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமி அவர்கள்,பெருந்தலைவர் காமராசர் போன்றவர்கள்.ஒளிவு மறைவு இல்லாமல் வெளிபடையாக வாழ்ந்து வந்தவர்களாகும்.அவர்களைப் பார்க்கும் போது இவர்கள் எந்த நிலையில் உள்ளார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
Post a Comment