Latest News

July 27, 2013

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் வாய்மொழி மூலமும் சாட்சியமளிக்கலாம்
by admin - 0

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் வாய்மொழி மூல சாட்சியமளிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வது தொடர்பில் ஆராயும் நோக்கில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் எழுத்து மூலம் சாட்சியமளிக்கும் கால அவகாசம் எதிர்வரும் மாதம் 15ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இலங்கையர்களினதும் தனித்துவ அடையாளங்களை பேணிப் பாதுகாத்து, ஒரே இனமாக கௌரவமாக வாழக்கூடிய பின்னணியை ஏற்படுத்தும் ஓர் முயற்சியாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினை அரசாங்கம் அடையாளப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் சாட்சியமளிக்க விரும்புவோர் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னதாக சாட்சியமளிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது
« PREV
NEXT »

No comments