Latest News

July 27, 2013

தயாசிறி பொறுமையுடன் செயற்பட்டிருக்க வேண்டும் – சஜித் பிரேமதாச
by admin - 0

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொறுமையுடன் செயற்பட்டிருக்க வேண்டுமென, கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மறைந்த தலைவரும், தமது தந்தையுமான அமரர் ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் பாதையை பின்பற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அதிர்ச்சிகளைத் தாங்கிக்கொண்டு பொறுமையுடன் இருப்பதன் மூலம் வெற்றியடைய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தயாசிறி, கட்சி மாறாது, நிதானமான முறையில் உரிமைக்காக போராடி நியாயத்தை வென்றெடுத்திருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments