Latest News

July 17, 2013

அன்டன் பால­சிங்­கத்தின் மறு அவ­தா­ரமே முத­ல­மைச்சர் வேட்­பாளர் சி.வி. விக்­னேஸ்­வரன்-சம்பிக்க
by admin - 0

இந்­தியா உட்­பட சர்­வ­தே­சத்­துடன் இணைந்து தமி­ழீ­ழத்­திற்­கான இரண்­டா­வது போராட்­டத்தை கூட்­ட­மைப்பு ஆரம்­பித்­துள்­ளது என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.
வட­மா­காண சபை தேர்­த­லுக்கு முன்னர் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் அதி­கா­ரங்கள் வலு­வி­ழக்கச் செய்­யப்­பட வேண்டும் என்ற உறு­தி­யான நிலைப்­பாட்டில் அனைத்து பெளத்த மக்­களும் நாமும் உள்ளோம். ஆனால் தற்­போது காணப்­ப­டு­கின்ற சூழ­லா­னது பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு சாத­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. இதற்கு அர­சாங்கம் முழுப்­பொ­றுப்பும் கூற வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தொடர்ந்தும் கூறு­கையில்,
வட­மா­காண சபை தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சி.வி. விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிறுத்­தி­யுள்­ளது. இதனை விக்­னேஸ்­வ­ரனும் ஏற்­றுக்­கொண்டு பிரி­வினை வாதத்­திற்கு துணை போன கூட்­ட­மைப்­பி­ன­ருடன் இணைந்து தமி­ழீழ போராட்­டத்­திற்கு தலைமை தாங்க முன்வந்­துள்ளர். விடு­தலைப் புலி­களின் ஆலோ­ச­க­ரான அன்டன் பால­சிங்­கத்தின் இழப்பை நிரப்­பு­வ­தற்­காக விக்­னேஸ்­வ­ரனை கூட்­ட­மைப்பு தெரிவு செய்­துள்­ள­தா­கவே தெரி­கின்­றது.
ஓய்வுபெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் ஒருவர் இவ்­வாறு பிரி­வி­னை­வா­தி­க­ளுடன் இணைந்­துள்ளார் என்றால் அவ­ரது முன்­னைய காலப் பகுதி மற்றும் பணிகள் தொடர்­பிலும் பல்­வேறு சந்­தே­கங்கள் தோன்­று­கின்­றன. எவ்­வா­றா­யினும் வடக்கு மற்றும் கிழக்­கையும் ஒன்­றி­ணைத்து மாகா­ணத்தில் வர­த­ராஜப்பெருமாள் செயற்­பட்­டதை விட மிகவும் ஆபத்­தான சூழலே எதிர்­வரும் நாட்­களில் வட­மா­கா­ணத்­திலும் ஏற்­படப்போகின்­றது.
ஏனெனில் சி.வி. விக்­னேஸ்­வரன் போன்ற சட்டம் நன்கு தெரிந்த ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் போட்­டி­யிட்டு வடக்கில் முத­ல­மைச்சர் பத­விக்கு தெரிவு செய்­யப்­பட்டால் அன்று தொடக்கம் இலங்­கைக்கு தலை­வலி ஆரம்­பித்து விடும். அவ்­வா­றா­ன­தொரு நிலையே ஏற்­படப் போகின்­றது. தமிழ்த்­தே­சி­யக்­கூட்­மைப்பின் தலைவர் சம்­பந்தன் நன்கு ஆராய்ந்த பின்­னரே மாவை சேனா­தி­ரா­ஜாவை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிறுத்­தாது சி.வி. விக்­னேஸ்­வ­ரனை நிறுத்­தி­யுள்ளார். இவர்­களின் நோக்கம் மத்­திய அர­சுடன் வட­மா­கா­ணம் மோத வேண்டும். அதற்கு பின்னர் 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற அதி­கா­ரங்­களை முழு அளவில் சட்ட ரீதி­யாக பெற்­றுக்­கொண்டு தனி தமி­ழீழ ஆட்­சிக்­கான அடித்­த­ளமே இன்று இடப்­பட்­டுள்­ளது.
இதன் பின்­ன­ணியில் இந்­தியா மற்றும் சர்­வ­தேச பிரி­வி­னை­வாத புலி ஆத­ர­வா­ளர்­களும் உள்­ளார்கள். எனவே அர­சாங்கம் உண்­மை­யான சூழலைப் புரிந்­து­கொண்டு வட­மா­காண சபை தேர்­த­லுக்கு முன்னர் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் திருத்­தங்­க­ளைக்­கொண்டு வந்து அதி­கா­ரங்­களை வலு­வி­ழக்கச் செய்ய வேண்டும். அவ்­வாறு இல்­லை­யென்றால் ஏற்­படும் ஆபத்­துக்­க­ளுக்கு அர­சாங்கம் பொறுப்புக் கூறவேண்டும்.
ஜாதிக ஹெல உறு­ம­யவின் நிலைப்­பாட்டில் எவ்­வி­த­மான மாற்­றமும் இல்லை. தேசப்­பற்­றுள்ள அனைத்து மக்­களும் எம்­முடன் ஒன்­றி­ணைந்தே உள்­ளார்கள். வட­மா­காண சபை தேர்­தலின் ஊடாக தனி தமி­ழீழம் உருவாவதை தடுக்க தேவையான அனைத்து போராட்டங்களையும் முன்னெடுப்போம். அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ போராட்டத்திற்கும் உயிர் கொடுப்பதாகவே கூட்டமைப்பின் செயற்பாடு அமைந்துள்ளது. அன்டன் பாலசிங்கத்தின் அவதாரத்தை இன்று சி.வி. விக்னேஸ்வரன் எடுத்துள்ளார். இதனையும் தோல்வியடையச் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
« PREV
NEXT »

No comments