Latest News

July 27, 2013

தயாசிறி ஜயசேகர அரசுடன் இணைய 25 கோடி கைமாறியதாம் !!!
by admin - 0

25 கோடி ரூபா பணத்தை பெற்று கொண்டே அரசாங்கத்தில், தான் இணைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருணாகல் ஹெட்டிபொல நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தயாசிறி ஜயசேகர 25 கோடி ரூபவை வாங்கி கொண்டு அரசுடன் இணைந்து விட்டார் என்று கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து சென்றவர்கள் மீது அப்படியான குற்றச்சாட்டுகளை அந்த கட்சி முன்வைத்தது. ஆனால் தயாசிறிய ஜயசேகர பணத்திற்கு அடிப்பணிந்தவன் கிடையாது. என்மீது இந்த குற்றச்சாட்டை சுமத்திய ஹரின் பெர்ணான்டோ மூன்றாம் தர அரசியல் குழியில் விழுந்துள்ளமை குறித்து வெட்கப்படுகிறேன்.
வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியின் மகனுக்கு பணம் பெறுமதியானதாக இருந்தாலும் எனக்கு பணம் பெறுமதியானதல்ல என்றார்.
அதேவேளை தயாசிறி ஜயகேகர, இலங்கை வங்கியில் இருந்து 9 கோடி ரூபா பணத்தை கடனாக பெற்றுள்ளதாகவும் அரசாங்கத்திடம் இருந்து பெற்று கொண்ட பணத்தில் அதனை திரும்ப செலுத்தியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
பங்கு சந்தையில் செய்திருந்த முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே அவர் இலங்கை வங்கியிடம் இருந்து 9 கோடி ரூபாவை கடனாக பெற்றிருந்தாகவும் அதனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருந்த அவர், திடீரென அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாக கூறப்படுகிறது.
« PREV
NEXT »

No comments