மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூங்கில்ஆறு பிரதேசத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றத்துக்காக 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி குளிக்கச் சென்ற வேளை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும்
சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படடுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிககைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments
Post a Comment