ஸியாமென் நகரில் இன்று பயணிகள்
பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர்
பலியாகியுள்ளதாக ஸியாமென் நகர
பொலிஸார் தெரிவித்துள்ளனர். 90 பயணிகளுடன் ஸியாமென்
நகரிலிருந்து புறப்பட்ட பஸ்ஸில்
திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 47 உயிரிழந்துள்ளதுடன் 34
பேர் காயமடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு அதிகாரியான குஓ செங்குன் கூறுகையில், புலன்விசாரணைகளின் தகவலின்படி இது திட்டமிடப்பட்டு தீ வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. குறித்த பஸ் டீசல் எஞ்சினைக்
கொண்டது. ஆனால் அந்த பஸ்ஸில் பெற்றோல் இருந்தமைக்கான தடையங்கள் காணப்பட்டது எனத்
தெரிவித்துள்ளார். தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.
No comments
Post a Comment