Latest News

May 12, 2013

மட்டு.திராய்மடு காட்டுப்பகுதியில் சட்ட விரோத ஆயுதங்கள் மீட்பு!
by admin - 0

மட்டு.திராய்மடு சுவிஸ்
கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியில் வெட்டிய பனைமரத்தின் நடுவில்
பாதுகாப்பான கறுப்பு பொலித்தீன் மற்றும்
முள்ளு கம்பிகளினால் சுற்றி வைக்கப்பட்ட
நிலையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜேர்மன் தாயரிப்பிலான புதிய இரண்டு கை குண்டுகளும், ரீ 56 ரக 60 தோட்டாவும், 2 மெகசினும்
கைப்பற்றப்பட்டுள்ளதாக
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உதவிப்
பொலிஸ் பரீசோதகரும், புலானய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.எம்.றஹீம்
தெரிவித்தார். சுவிஸ் கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியில் விறகு வெட்டும் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வு பிரிவுக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வு பிரிவு பொறுப்பதிகாரி என்.எம்.ற
தலைமையிலான பொலிஸார் குறித்த சட்ட
விரோத ஆயுதங்களை கைப்பற்றி அதனை மீட்டுள்ளனர். சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
அனைத்தும் தற்போது மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதனை நீதிமன்றத்தில்
ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வுப்
பிரிவு பொறுப்பதிகாரி என்.எம்.றஹீம் சுவிஸ்
கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியில் இருந்த
ஒருவர் இந்த சட்ட விரோத
ஆயுதங்களை வைத்திருந்திருக்கலாம் எனவும் பொலிசாரின் பரீசோதனையின் பயத்தால் மறைத்து வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments