Latest News

May 21, 2013

மன்னார் ஊடகவியலாளர் ஜோசப்பை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பு
by admin - 0


மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோவை நாளை (22) காலை 9 மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் வவுனியா காரியாலயத்திற்கு சமூகமளிக்கமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் உயிரிழத்த மக்களுக்காக கடந்த 18ஆம் திகதி மாலை மன்னாரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு சென்ற பொலிஸாரும், இராணுவத்தினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் உட்பட அந்த நிகழ்வில் கழந்து கொண்ட 15 பேரை கைது செய்திருந்தனர்.

இதன்போது செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோவும் கைது செய்யப்பட்டு விசாரனைகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோவை நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு (சீ.ஐ.டி) பொலிஸாரின் வவுனியா காரியாளையத்திற்கு சமூகமளிக்கமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான கடிதம் தலைமன்னார் பொலிஸாரினுடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
« PREV
NEXT »

No comments