Latest News

May 03, 2013

“கட்சியை கலைத்து கூட்டமைப்புடன் இணையத்தயார்” விளக்கம்
by admin - 0

நேற்றய தினம் இடம்பெற்ற மே தின நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் அவர்கள் தனது உரையில் கூட்டமைப்புடன்
இணைந்து செயற்படுவது தொடர்பாக கருத்துக் கூறும்போது “கட்சியை கலைத்துவிட்டு கூட்டமைப்புடன் இணையத்தயார்” என்று கூறியுள்ளதாக
செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எந்தவொரு இடத்திலும் அவர்
“கட்சியை கலைத்து விட்டு” என்று குறிப்பிடவில்லை. அவர் தனது உரையில் “எங்களுடன் கூட்டமைப்பின் பல்வேறு அமைப்புக்கள்
தனித்தனியாக பேசுகின்றனர். அவர்கள் தனித்தனியாக வந்து கதைத்தால் என்ன,
கூட்டாக வந்து கதைத்தால் என்ன அவர்களிடம் கூறுவதற்கு எமக்கு ஒரு செய்திதான்
உள்ளது. அது எங்களுக்கு எந்த கட்சியினுடைய பெயருக்கு கீழ் இயங்கப்
போகின்றோம் என்பது முக்கியமல்ல, எந்த சின்னத்திற்கு கீழ் போட்டியிடப்
போகின்றோம் என்பது முக்கியமல்ல. கட்சியில் என்ன பதவியில் இருக்கப்போகின்றோம் என்பது முக்கியமல்ல. தலைமைப் பதவிகளும் முக்கியமல்ல.
எமது ஒரே ஒரு நிபந்தனை கொள்கை மட்டுமே. அந்தக் கொள்கை தனித்துவமான
தேசம், தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை இது 2009 ற்கு முன்னர்
கூட்டமைப்பினது நிலைப்பாடுதான். நாம் புதிய
கொள்கை வியாக்கியானங்களை கொடுக்கவில்லை. இந்த ஆரம்ப
நிலைப்பாட்டுக்கு கூட்டமைப்புக் கட்சிகளில் யார் திரும்ப தயாராக இருந்தாலும் நாங்கள் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம்”
என்றே குறிப்பிட்டிருந்தார்.


நன்றி செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்












« PREV
NEXT »

No comments