Latest News

May 10, 2013

சமாதானம், அமைதி நிறைந்த நாடாக பிரிட்டன்
by admin - 0

பொருளாதாரம் மற்றும் சமாதானத்துக்கான நிலையத்தின்
பிரிட்டிஷ் சமாதானச் சுட்டெண் வெளியாகியுள்ள
நிலையிலேயே   1 இலட்சம் பேரில் கொலையாளிகளின்
வீதம் 2012 இல் 1 ஆகவும் 2003 இல் 1.99 ஆகவும்
இருந்துள்ளது. உலகளாவிய நாடுகளுடன் ஒப்பிடுகையில்
பிரிட்டனே சமாதானமும் அமைதியும் நிறைந்த
நாடகவுள்ளது. இதேவேளை கார்டிப்
பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்
மூலமான தகவல்களிலும்  பிரிட்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களின் தகவல்கள் அடிப்படையிலும் 2012 இல் 14 வீதமான
வீழ்ச்சி காணப்படுகின்றது.  இந்த சுட்டெண்ணை வெளியிட்ட பிரிட்டன் சமாதான சுட்டெண் அமைப்பானது வன்முறைகள் அற்ற
நிலைமை அல்லது வன்முறைப் பயம் அற்ற நிலைமையென இத் தருணத்தைச் சித்தரித்துள்ளது.
« PREV
NEXT »

No comments