Latest News

May 27, 2013

எறும்பு கடித்து பெண் மரணம்
by admin - 0

எறும்பு கடித்த பெண்ணொருவர் சிகிச்சை பலனளிக்காமல் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.

சீதுவை, லியனகே முல்லை பிரதேசத்தைச் சேர்ந்த லலிதா பத்மினி திசாநாயக்க என்ற 59 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணமானவராவார்.

எறும்பு கடித்ததன் காரணமாக பாதிப்புக்குள்ளான இவர் சீதுவை விஜயகுமாரணதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பி;ற்பகல் ஒரு மணியளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்கமால் பிற்பகல் 3.10 மணியளவில் மரணமாகியுள்ளார்.

இதேவேளை இன்று இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் எறும்பு கடித்ததினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மரணம் சம்பவித்துள்ளதென வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்

« PREV
NEXT »

No comments