Latest News

May 19, 2013

பலி எடுத்த கடல் கடல்படை சிப்பாய் பலி-சாகுனம் பார்க்கும் மகிந்த அதிர்ச்சி
by admin - 0

யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின்போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியவேளை காணாமற்போன கடற்படை வீரரது சடலம் இன்று (19) காலை மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய
தெரிவித்தார். காலி முகத்திடல் கடற்பரப்பில் நேற்று (18) காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியது. படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவித்தன.எதற்கும் சோதிடம் பார்க்கும் மகிந்த இதனால் கலக்கம் அடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன 
« PREV
NEXT »

No comments