Latest News

May 06, 2013

டக்கிளஸ் தேவானந்தாவை விரட்டியடிப்போம்
by admin - 0

"டக்கிளஸ் தேவானந்தாவை விரட்டியடிப்போம்" என்ற துண்டுப்பிரசும் யாழில் விநியோகிப்பு! "டக்கிளஸ் தேவானந்தாவை விரட்டியடிப்போம்" என்ற தலைப்பில் அமைந்த துண்டுப்பிரசுரங்களை போரால் பாதிகிகப்பட்ட மக்கள் இயக்கம் நேற்றைய தினம் முதல் வட பகுதி மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளில் விநியோகித்து வருகின்றனர்.தொடர்சியாக
இன்றைய தினமும் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்களை குறித்த அமைப்பினர் விநியோகித்து வந்துள்ளனர். 'மணல் விநியோக ஏகாதிபத்திய நிறுவனமான மகேஸ்வரி நிதியத்தினால் கடந்த 4 வருடங்களில் மண்
கொள்ளை மூலம் பொதுமக்களின் பணம் ரூபா 4,000 மில்லியன் பணம் கொள்ளையடித்தது போதாதா?
டக்கிளசே மண்கொள்ளையை நிறுத்து! 'தமிழ் மக்களை தொடர்ந்து பயப்பீதியில் வைத்திருக்கும் டக்கிளஸ் தேவானந்தாவை விரட்டியடிப்போம்' போன்ற வசனங்கள் உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிகப்பட்டன. இதேவேளை இன்று யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்த
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் பொருளாளர் புஸ்பராஜா புவிலன் மீது மோட்டர் சைக்கிள்களில்
வந்த குழுவினர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments