Latest News

May 13, 2013

தமிழரசுக் கட்சி தனது முடிவிலிருந்து மாறவில்லை 4 கட்சிகளும் முடிவு எடுக்கும் நிலை : சுரேஷ் எம்.பி.
by admin - 0

தமிழரசுக் கட்சி தனது முடிவில் இருந்து மாறவில்லை. எனவே நான்கு கட்சிகளும் இணைந்து ஓர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான சிவில் அமைப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடத்திய சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என தெரிவித்திருந்ததுடன் தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்றும்
சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments