Latest News

April 09, 2013

யாழ் சிறையில் தமிழக மீனவர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்
by admin - 0

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் இந்திய மீனவர்களை சிறைச்சாலை சிங்கள அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மீனவர்கள் அத்து மீறி வடகடலில் கடற்றொழில் நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சிறைச்சாலை சிங்கள அதிகாரி இந்தியாவில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் பற்றி இந்திய மீனவர்களிடம் கேட்டுள்ளார்.

இதற்கு இந்திய மீனவர்கள் அவரது கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. இதனால் தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பகமாக தெரியவருகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு இலக்கான இந்திய மீனவர்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.
« PREV
NEXT »

No comments