Latest News

April 29, 2013

விவசாய பீடம் அறிவியல் நகரில்
by admin - 0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்
விவசாய பீடத்தின் கல்வி நடவடிக்கையை ஆகஸ்ட் மாதத்தில்
கிளிநொச்சியில் ஆரம்பிப்பதற்குரிய
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக
பேராசிரியர் எஸ்.மிகுந்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக
இயங்கி வருகின்ற
விவசாயபீடத்தை கிளிநொச்சி முறிகண்டி அறி
நகரில் அமைந்துள்ள வசதிகளுடனான
கட்டிடத்தில் ஆரம்பிப்பதற்குரிய திருத்த
வேலைகள் நடைபெற்று வருவதாகவும் மாணவர்கள் விடுதிக்குரிய வேலைகள்
நிறைவுபெறவில்லை எனவும் பேராசிரியர்
எஸ்.மிகுந்தன் குறிப்பிட்டார். அத்துடன் பொறியியல் பீடத்தை இவ்வருடம்
ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளும்,
நடைபெற்றுவருவதாகவும், இவ்வருடம்
பொறியில் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட
50 மாணவர்களை முதற்கட்டமாக
கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
குறிப்பிட்டார். இலங்கை, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன்
கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதுடன்,
இதற்கு இந்திய அரசாங்கம் 300 மில்லியன்
ரூபாவை வழங்கியுள்ளது. மேலும் கிளிநொச்சி விவசாயம் மற்றும்
பொறியியல் பீடம் அமையும் பகுதியை நகர
அபிவிருத்தித் திட்டமாக
மாற்றுவதற்கு ஆயிரத்து ஐந்நூறு மில்லியன்
ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர்
தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments