Latest News

March 20, 2013

மாணவர்களின் முகநூல் பக்கம் மிகப் பெரும் செய்தி நிறுவனங்களின் இணையத்தளங்களை விட அதிகம் பேர் வந்து படிக்கும் இடமாக மாறியுள்ளது.
by admin - 0

Loyolahungerstrike
தமிழ் மாணவர்களே! ஊடகம் நம்முடைய
போராட்டத்தை எப்படி இருட்டடிப்பு செய்கிறது என்பதை நீங்கள்
அறிவீர்கள். இந்திய நாட்டின் வரலாற்றில் நடந்த மிகப்
பெரும் போராட்டங்களில் ஒன்று ஈழத் தமிழர்களின்
உரிமைக்காக தமிழ்நாட்டு மாணவர்களால்
நடத்தப்படும் இந்தப் போராட்டம். இந்தப் போராட்டத்தை மறைத்தும் , இதன்
நோக்கங்களை திரித்தும் இந்த ஊடகங்கள்
இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இன்று இந்த ஊடகங்களையும்
மீறி தமிழ்நாட்டு மாணவர்களின் முகநூல் பக்கம்
மிகப் பெரும் செய்தி நிறுவனங்களின்
இணையத்தளங்களை விட அதிகம் பேர்
வந்து படிக்கும் இடமாக மாறியுள்ளது.
மாணவர்களின் இந்த நேர்த்தியான செயல்பாடு வடநாட்டு ஆங்கில ஊடகங்களின்
முகத்தில் கரியைப் பூசியதுடன் , தேவைப்பட்டால்
தமிழ் மாணவர்கள் தங்களுக்கான ஊடகங்களை சில
நாட்களில் எற்படுத்திக் கொள்ளும்
வல்லமை படைத்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. இந்தப் பக்கத்தின் நிருபர்கள்
போராட்டத்தை நேரடியாக நடத்தும் மாணவர்கள்.
இந்த பக்கத்தை விளம்பரப் படுத்துவது மாணவர்களின்
போராட்டத்தில் இருக்கும் நேர்மை. இந்தப் முகநூல்
பக்கத்தின் வெற்றி போராடும்
ஒவ்வொரு மாணவனின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. ஒரு முறை அனைவரும் இந்த
மாணவர்களுக்கு கை தட்டுங்கள்!
« PREV
NEXT »

No comments