Latest News

January 09, 2013

ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
by admin - 0

இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தான் பணிபுரிந்த வீட்டில் குழந்தைக்கு பால் கொடுத்த போது அக்குழந்தை மரணமடைந்ததை அடுத்து ரிசானா நபீக் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு சவுதி நீதமன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ரிசானாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் இறுதியில் ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் ரிசானா நபீக் 2005ம் ஆண்டு சவுதி தவாத்மி சிறையில் அடைக்கப்பட்டார். 2010ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டது.

« PREV
NEXT »

No comments