செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன்
பயணித்த வாகனத்தின் மீது இனந்தெரியாத
நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில்
மேற்கொள்ளப்பட்டு வரும் நில
அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டு மதியம் யாழ்ப்பாணம்
நோக்கி திரும்பிய சமயம், முல்லைத்தீவு –
மாங்குளம் வீதியில் முள்ளியவளைக்கு அருகில் இத்தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இத்
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில்
கஜேந்திரனின் வாகனமும் பின்னால ;வந்த
வாகனமும் பலத்த
சேதங்களுக்கு உள்ளானதாகவும் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment