வரிசையாக 4 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தை. இதில் ஆண் குழந்தைகள் முறையே 740 கிராம்,
610 கிராமும், பெண் குழந்தைகள் 540 கிராமும்,
590 கிராமும் இருந்தன. எடை குறைவாக பிறந்திருந்த காரணத்தினால்
குழந்தைகள் 4 பேரையும் டாக்டர்கள்
‘இன்குபேட்ட’ ரில் வைத்து தீவிரமாக
கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்தன. இதனால் குமரேசன் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 740 கிராம் எடையுள்ள ஆண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து டாக்டர் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், 3 அல்லது 4 குழந்தைகள் பெறுவது அரிதானதாகும். கடந்த வாரம் ஒரு பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. அதிலும் இரு குழந்தைகள் இறந்து போயின. நேற்று பிறந்த 4 குழந்தைகளில் 3 குழந்தைகள் இறந்து விட்டன.
No comments
Post a Comment