யாழ். நகரப் பகுதியில் இரு பிரிவினருக்கிடையில் இடம்பெற்ற தகராரில் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் யாழ். திருக்குடும்ப கன்னியர்மட வீதி மற்றும், மருத்துவமனை வீதி ஆகிய இரு இடங்களில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கன்னியர் மட வீதியைச் சேர்ந்த சிலர் மருத்துவமனை வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்து யுவதி ஒருவரை வெட்டியுள்ளனர்.
இதில் இராசேந்திரம் உஷா என்ற 24 வயது யுவதி கழுத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த யுவதியின் தரப்பினர், கன்னியர்மட வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன் போது இருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அப்பகுதி பெரும் கலவரமாகக் காணப்பட்டது.
இச் சம்பவத்தையடுத்து சம்பவ இடத்தக்கு விரைந்த காவற்றுறையினர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சந்தேக நபர் இருவரையும் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
இன்று மதியம் யாழ். திருக்குடும்ப கன்னியர்மட வீதி மற்றும், மருத்துவமனை வீதி ஆகிய இரு இடங்களில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கன்னியர் மட வீதியைச் சேர்ந்த சிலர் மருத்துவமனை வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்து யுவதி ஒருவரை வெட்டியுள்ளனர்.
இதில் இராசேந்திரம் உஷா என்ற 24 வயது யுவதி கழுத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த யுவதியின் தரப்பினர், கன்னியர்மட வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன் போது இருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அப்பகுதி பெரும் கலவரமாகக் காணப்பட்டது.
இச் சம்பவத்தையடுத்து சம்பவ இடத்தக்கு விரைந்த காவற்றுறையினர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சந்தேக நபர் இருவரையும் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
No comments
Post a Comment